FREEGOSPELSONGS

ALBUM INFO

இவை யாரது நாட்கள்? ஆவியானவர் நாட்கள்

Ivai Yarthu Naatkal? Aaviyanavar Naatkal

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

இவை யாரது நாட்கள்?
ஆவியானவர் நாட்கள்

எப்படி நாட்கள்?
கடைசி நாட்கள்,
கடைசி நாட்கள்! - இவை

1. அன்பு தணிவது ஆதாரம்
கோபங்கள், சண்டைகள் ஆதாரம் (2)
தேசங்கள், ராஜ்யங்கள்
யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம் .. (2) - இவை

2. பாவங்கள் பெருகுதல் ஆதாரம்
மனக் கடினங்கள் ஆதாரம் (2)
சோதோம், கொமோராவின்
நாட்களைக் காணுவதும் ஆதாரம் .. (2) - இவை

3. இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்
சமுத்திர அலைகளும் ஆதாரம் (2)
பூகம்பம், புயல்கள்
புவியெங்கும் தொடருதல் ஆதாரம்.. (2) - இவை

4. சுவிசேஷ தீவிரம் ஆதாரம்
சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம் (2)
இயேசுவின் நாமத்தில்
முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம் .. (2) - இவை



Credits

Bro.Emil Jebasingh & Team
www.jebasingh.com

உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா

Uthamamaai Mun Sella Uthavi Seyum Yehova

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1. உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும் (2)

2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) - உத்தம

3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக் கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக்காக்க வழிவகுத்தருளவேண்டும் (2) - உத்தம

4. தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபைசெய்யும் இயேசுதேவா உண்மை வழி காட்டியே (2) - உத்தம



Credits

Bro.Emil Jebasingh & Team
www.jebasingh.com

உம்மைப்போல் யாருண்டு

Ummaipol - Yaarundu

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உம்மைப் போல் யாருண்டு – எந்தன்
இயேசு நாதா இந்தப் பார்தலத்தில்
உமைப் போல் யாருண்டு

பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்

உலகம் மாமிச பிசாசுக்கடியில்
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம்போல் நடந்தேன்
ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஒர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்

இன்றைக்கு நான் செய்யும்
இந்தத் தீர்மானத்தை என்றைக்கும்
காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என்னுள்ளம் இறக்கும்

வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்

Ummai pol yarundu enthan Lyrics in English
ummaip pol yaarunndu – enthan
Yesu naathaa inthap paarthalaththil
umaip pol yaarunndu

paavappitiyinil sikki naan ulanten
thaevaa tham anpinaal manniththeer

ulakam maamisa pisaasukkatiyil
atimaiyaakavae paavi naan jeeviththaen
nimmathi ilanthaen thooymaiyai maranthaen
manampol nadanthaen
aemaattam atainthaen
ennaiyaa thaetineer aiyaa Yesu naathaa
ummai marantha or thuroki naan
ennaiyaa thaetineer aiyaa Yesu naathaa
atimai umakkae ini naan

intaikku naan seyyum
inthath theermaanaththai entaikkum
kaaththida aaviyaal nirappum
norukkum urukkum utaiyum vanaiyum
umakkae ukantha thooya sareeramaay
aimporikalaiyum umakkul adakkum
Yesuvae aaviyaal nirappum
vetti vaalkkaiyulla makanaay thikala
akkini ennullam irakkum

veettilum oorilum sellumidamengum
sothanai vanthitil karththaa neer kaaththidum
maesiyaa varukai varaiyil palarai
siluvaik karukil alaikka aevidum
mulangaalil nirka vaethaththai ariya
thinanthorum thaevaa unarththum
umakkum enakkum itaiyil ethuvum
entumae varaamal kaaththidum



Credits

Produced by Bro.Emil Jebasingh

உம்மையே நோக்கி

Ummaiyae Nokki

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இயேசுவே
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இந்தப் பூவிலே
இந்த வாழ்விலே
உம்மையே நோக்கி ஓடுகிறேன் - (2)

1. கவலைகள், கண்ணீர்கள் பெருகும் வேளையில்
அலைகளில் சிக்கியே மூழ்கும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் - உம்மையே

2. சதிகளும் பழிகளும் காணும் வேளையில்
வழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் - உம்மையே

3. நன்மைக்கு தீமைகள் குவியும் வேளையில்
சாத்தானின் சூட்சிகள் அறியும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் - உம்மையே



Credits

Produced by Bro.Emil Jebasingh

உள்ளத்தில் அவர்பால்

Ullathil Avar

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

1. பரமன் பேரிலே பற்று கொண்டோ ரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்!

உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்

2. தேசங்கள் தீவுகள், பல பிராந்தியங்கள்,
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே, நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?

உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்

3. செல்வம், சீர் சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்

உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்



Credits

Produced by Bro. Emil Jebasingh

உறக்கம் தெளிவோம் உற்சாகம்

Urrakkam

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான் மழை மாரி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்

1. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும்கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம்

2. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை - உறக்கம்

3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம் - உறக்கம்

4. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார் - உறக்கம்



Credits

Produced by Bro.Emil Jebasingh

எங்குமுள்ளோர் யாரும்

Engumullor

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே - (2)

1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)

2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன்நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)

3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
ஒலிவ மரத்தின் பலன்கள்கூட அற்றுப்போயினும்
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)



Credits

Produced by Bro.Emil Jebasingh

எத்தனை நாட்கள்

Ethanai Naatkal

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எத்தனை நாட்கள் செல்லும்
இயேசுவின் சுவிசேஷகம்
அத்தனை நாட்டவரும் அறிய
எத்தனை நாட்கள் செல்லும்? - (2)

1. ஆடுகள் ஏராளம்
அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும்
என் பெலன் தாராளம் - எத்தனை

2. தேவைகள் நிறைந்து நிற்க
வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள்
இணைவது என்று வரும்? - எத்தனை

3. உண்மையாம் கோதுமைகள்
மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா?
நாம் உடைபடும் நாள் வருமா? - எத்தனை



Credits

Produced by Bro. Emil Jebasingh

எந்தன் உள்ளம் தங்கும்

Enthan Ullam

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசுநாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசுநாயகா
இயேசுநாயகா
இயேசுநாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசுநாயகா

2. மாம்சக்கிரியை போக்கும் இயேசுநாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா
இயேசுநாயகா
இயேசுநாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா

3. என்னை உமக்குத் தந்தேன் இயேசுநாயகா
இனிநான் அல்ல, நீரே, இயேசுநாயகா
இயேசுநாயகா
இயேசுநாயகா
இனி நான் அல்ல, நீரே, இயேசுநாயகா



Credits

Produced by Bro.Emil Jebasingh

எமைப் படைத்தவரே

Yammai Padaithavarae

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் சமூகமதில் இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2)

எங்கள் இதயங்களில்
உந்தன் வசனம் தாரும்
பாதைக்கு வெளிச்சம் வசனம் - 2

2. சென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள்
எத்தனை அதிகம்! அதிகம்!
வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்
இயேசுவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2) - எங்கள்

3. தூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல
ஆவியின் கிருபை தந்திடும்
உண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று
நிரப்பும், ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! - (2) - எங்கள்



Credits

Produced by Bro.Emil Jebasingh

என் உள்ளில் வாரும்

En Ullil Vaarum

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1.என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக்கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!

தேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும் - (2)
என் உள்ளம் இன்றே வாரும்

2.முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே - தேவனே

3.மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே! - தேவனே

4.என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம்
காணிக்கை, ஏற்றருளும்!
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்! - தேவனே



Credits

Produced by Bro. Emil Jebasingh

என்னென்று சொல்வேன்

Yeneandru Solvean

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

என்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன்
கர்த்தாவின் பேரன்பை விட்டு - (2)
நான் பெற்ற அன்பு எத்தனை அதிகம் - (2)
கர்த்தாவின் இணையற்ற அன்பு - என்னென்று

1. காலையும் மாலையும் கருத்தினில் நிற்கும்
கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு-(2)
நினைவிலும் கனவிலும் நீங்காது நிற்கும் - (2)
கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு - என்னென்று

2. மண்ணில் பிறந்து மண்ணோடு போகும்
மனிதர்க்கு ஏன் இந்த அன்பு - (2)
மதிப்பிற்கு உரியோர், மகிமைக்கு உரியோர் - (2)
என்பதே கர்த்தாவின் தீர்ப்பு - என்னென்று

3. பார்வோனின் அடிமைகள் கண்டதோர் வெற்றி
உலகத்தின் மனிதர்கள் பெற்றார் - (2)
பாவத்தில் வெற்றி மரணத்தில் வெற்றி - (2)
ஏற்பவர் அனைவர்க்கும் வெற்றி - என்னென்று

4. அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் உண்டோ
இயேசுவின் அன்பை போல் உண்டோ - (2)
முகம்பார்த்து அல்ல அகம் பார்க்கும் அன்பு - (2)
அனைவர்க்கும் உரித்தான அன்பு - என்னென்று



Credits

Produced by Bro Emil Jebasingh

எனக்கு ஒத்தாசை வரும்

Yennakkothaasai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எனக்கு ஒத்தாசை வரும்
பர்வதங்களுக்கு நேராய்
கண்களை ஏறெடுப்பேன் - என்
கண்களை ஏறெடுப்பேன்

1. காலைத் தள்ளாட வொட்டார் - உன்னைக்
காக்கிறவர் உறங்கார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு

2. உன் வலபக்கமாக
கர்த்தர் நிழலாகிறார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு

3. தீங்குக்கு விலக்கிக் காப்பார்
அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு

4. உன் போக்கையும் வரத்தையும்
இதுமுதல் என்றைக்கும் காப்பார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு



Credits

Produced by Bro.Emil Jebasingh

காத்திடும் எங்களைக்

Kathidum engalai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

காத்திடும் எங்களைக் கருணை பிதாவே
நேத்திரம் போலவே கருணை பிதாவே
பாத்திரமாகவே அருமை பிதாவே நான்
தோத்திரம் பாடுவேன் அருமை பிதாவே - (2)
காத்திடும் எங்களை...

1. பலபல நிலைகளில் அருமைப் பிதாவே - என்
பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே
சகலமும் நீரே சர்வமும் நீரே
சாந்தியும் நீரே சக்தியும் நீரே
பலபல நிலைகளில் அருமை பிதாவே - என்
பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே
காத்திடும் எங்களை...

2. நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என்
நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே
மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே;
வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே
நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என்
நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே
காத்திடும் எங்களை...



Credits

Produced by Bro. Emil Jebasingh

காணக் கூடாத என்

Kanakudatha

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1. காணக் கூடாத என் தங்கம் அல்லோ
காடு மேடுமாகச் செல்ல அல்லோ
காணாத ஆட்டினைத் தேடி அல்லோ
என் கர்த்தாதி கர்த்தன் அல்லோ...

ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ - (3)
தூங்கு பாலா தூங்கு நீ
ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ

2. விண்ணாளும் மேன்மையைத் தள்ளினாயோ
மண்ணாளும் ராஜனாய்ப் பிறந்தாயோ
உன்னாலும் நாங்களும் வாழ்ந்திடவோ
நீ எந்நாளும் இன்பமல்லோ -ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ...



Credits

Produced by Bro.Emil Jebasingh

கர்த்தனே எம்

Kartharae Yen Thunai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார் (2)
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் - கர்த்தனே

2. பாவி என்றெனைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை - கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை -கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே உம்மைப் பாடக் கூடுமோ? (2)
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை - கர்த்தனே



Credits

Produced by Bro.Emil Jebasingh

கர்த்தரைத் துதியுங்கள்

Kartharai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

4. நம்பினார் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

5. எல்லாம் அறிந்தவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
எல்லாம் வல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்



Credits

Produced by Bro.Emil Jebasingh

கர்த்தர் தாமே

Karthar Thaamae

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
நம் பட்சத்தில் நிற்பதால்
சத்ரு வெள்ளம்போல் வந்தாலும்
பத்திரமாய் நிற்கின்றோம்

நம்மை நம்பி, பிறரை நம்பி
நாம் நடந்தால் விம்முவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம்

1. மனித வாழ்க்கை கண்ணீர் என்பார்
உலகில் அநேகர் உண்டல்லோ
கர்த்தரின் துணை அறியார் கூறும்
மன வருத்தம் அதுவல்லோ
துன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள்
எதுவென்றாலும் வெல்லுவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்

2. இம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர்
இனிமேலும் உன்னை நடத்தாரோ
கர்த்தரில் நீ மனம் பதித்து
நிதம் நடந்தால் நடத்தாரோ
மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள்
வியாதி, தோல்வி வந்தாலும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்

3. என் உள்ளத்தில் என் உள்ளத்தில்
வாசம் செய்யும் கர்த்தாவே
இயேசுவில் நான் நேசம் கொண்டு
வளரச் செய்யும் கர்த்தாவே
கறைகள் இன்றி, குறைகள் இன்றி
உலகை கடக்கச் செய்திடும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்



Credits

Produced by Bro.Emil Jebasingh

கண்கள் பன்னீர் தரும்

Kangal Panneer

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் - 2
கண்ணல்லோ பொன்னல்லோ ஆராரோ ஆரீரோ

1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2 - கண்கள்

2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2 - கண்கள்



Credits

Produced by Bro.Emil Jebasingh

ஒரு நாள் வருவார்

Orunaal varuvaar

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

நம் கால மனிதர் இயேசுவை காண
ஆயத்த மாக்கிடுவோம்
நீ ஆயத்தமாகு
ஆயத்தப் படுத்து
வருகை மிக சமீபம் - ஒரு நாள்

1. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம்
தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல்
ஆயத்தமாகிடுவோம் - நம் கால

2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம்
முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார்
ஆயத்தமாகிடுவோம் - நம் கால

3. தேடாதே உனக்கு பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம்
தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை
ஆயத்தமாகிடுவோம் - நம் கால



Credits

Produced by Bro.Emil Jebasingh

தூய்மையே வலிமை

Thuimayae

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

தூய்மையே வலிமை கேளீர்!
வாய்மையே உயர்வு காணீர்!
இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) தூய்மையே

1.சந்திரன் பாதையைக் கண்டாய்
சமுத்திர ஆழத்தை வென்றாய் - (2)
தூய்மையின் பாதைதான் எங்கே?
எனப் பதில் ஏதும் உலகினில் இல்லை! - (2) - தூய்மையே

2.தத்துவம் பேசுவார் உண்டு
தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு - (2)
கல்வி கொடுப்பது அறிவு
ஆனால் தேவன் அருளுவது ஞானம்! - (2) - தூய்மையே

3.அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
பலபல புதுமைகள் நலம்தான் - (2)
யாவையும் கண்ட மனிதா
மன தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! - (2) - தூய்மையே

4.பரிசுத்த ஆவியின் நிறைவு
பரிசுத்தமானதோர் வாழ்வு - (2)
வெற்றியின் ஜீவியம் கொள்ள
இயேசு அழைக்கிறார், இணங்கி நீ செல்ல! - (2) - தூய்மையே



Credits

Produced by Bro.Emil Jebasingh

தினம் அகமகிழ்ந்து

Thinam Agamagilnnthu

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

தினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து
என் இயேசுவை கைதட்டி துதிப்பேன் - (2)

1. சென்ற கால வாழ்வினில் - (2)
செய்து விட்ட பாவங்கள் - (2)
இயேசு தந்த மன்னிப்பால் - (2)
என்னை விட்டுப் போயிற்று - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்

2. ஜீவ காலம் முழுதும் - (2)
தாம் சொல்வதை நான் செய்யவே - (2)
தம்மிடம் நீர் சேர்த்தீரே - (2)
எத்தனை என் பாக்கியம் - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்

3. இயேசுவே தம் பாதையில் - (2)
எத்தனை என் மகிழ்ச்சி - (2)
நித்தம் நித்தம் வெற்றியே - (2)
எத்தனை என் சந்தோஷம் - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்

4. நீயாயத்தீர்ப்பு நாளிலே - (2)
நாணி வெட்கி போகாமல் - (2)
பாடித் தம்மை போற்றவே - (2)
இப் பாவியை நீர் மீட்டீரே - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்



Credits

Produced by Bro.Emil Jebasingh

சின்ன சின்ன பிள்ளை

chinaa chinaa

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க - இது
சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க - (2)
எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க -
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன

1.ஏரோது இராஜாவாயிருக்கலாமுங்க -இவர்
சர்வலோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க
பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2)

2.யூத மதத் தலைவரென்று நினைக்காதீங்க - உங்கள்
மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க
உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன

3.படிப்பு, பவுசு, ஜாதி, நாடு பார்க்காதீங்க - இந்த
பிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க
புதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன



Credits

Produced by Bro.Emil Jebasingh

சின்ன தம்பியே

Chinna Thambie

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

சின்ன தம்பியே பாவம் செய்யாதே
சின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2)
சின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2
பாவத்திலே சின்னது பெரியது
என்றும் இல்லையே - (2) - சின்ன தம்பியே

1. பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும்
செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2)
பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2
பாவத்திலே சின்னது பெரியது
எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே

2. பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி
செய்த பாவங்கள் போவதும் எப்படி - (2)
அதற்கு ஒரே வழி கொல்கதா வழி - 2
பாவத்திலே சின்னது பெரியது
எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே



Credits

Produced by Bro.Emil Jebasingh

சரணம் ஐயா

Saranam Ayya

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1. சரணம் ஐயா தேவனே
சர்வ வல்ல தேவனே - (2)
பாவம் தீர ஜீவன் விட்ட
ஜீவனுள்ள தேவனே - (2)

இயேசுவே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்!

2. பரிசுத்தத்தை சிநேகிக்கும்
பரிசுத்தராம் தேவனே - (2)
இதய சுத்தம் என்னில் காண
என் உள்ளத்தில் இன்று நீர் - (2) - இயேசுவே

3. நித்தம் எம்மை நடத்துவீர்
நம்பினோரை கைவிடீர் - (2)
மக்கள் எல்லாம் உம் படைப்பு
ஒருவரையும் புறக்கணீர் - (2) - இயேசுவே

4. நொறுங்கிப் போன வாழ்வையும்
புதியதாக மாற்றுவீர் - (2)
நொந்துபோன குடும்பங்களையும்
மீண்டும் வாழச் செய்குவீர் - (2) - இயேசுவே

5. ஜெயம் கொடுக்கும் தேவனே
கரம் கொடுத்து நடத்துவீர் - (2)
ஜெயத்திற்கு மேல் ஜெயத்தை காண
என்னுடனே இன்று நீர் - (2) - இயேசுவே

6. அற்புதங்கள் செய்குவீர்
அதிசயங்கள் காட்டுவீர் - (2)
இம்மையிலும் மறுமையிலும்
எங்களை நீர் நடத்துவீர் - (2) - இயேசுவே



Credits

Produced by Bro.Emil Jebasingh

கேட்டிடும் சத்தம்

Keatidum Sattham

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்
ஆத்தும நேசரின் காலடிகள்
பகலினில் வெயிலில் இரவினில் நிலவில்
நாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும்

1. கதவைத் திறந்திட தாமதம் ஏனோ
திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2)
வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன்
நேசரில்லை, காலடிகள் - கேட்டிடும்

2. நேசரின் கால்தடம் பின் செல்லலானேன்
சேர்ந்த இடம் அதோ கல்வாரியே! - (2)
பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது
கல்வாரியே! காலடிகள் - கேட்டிடும்



Credits

Produced by Bro.Emil Jebasingh

கூடிச் சேருவீர் ஒன்றாகத்

Koodi Seruveer

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
உள்ளத்தில் இயேசுவின்பால் அன்புகொண்டோர் யாரும் கூடுவீர் - 2
கல்வாரிக்கருகில் கூடுவீர் - (2)

1. சிறுவர் நடுவர் முதுவர் யாரும் சேர்ந்து கூடட்டும்
உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும் - 2
துதியின் கீதம் எழும்ப ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் - 2

2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
விகற்ப மின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார் - 2
அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்குவார்
கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? - ஆகையால் - 2

3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள்மட்டும்
‘மிஷனரிகள்’ என்ற வார்த்தைப் பேசப்படட்டும் - 2
தியாகம் புரிவார் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
இயேசுவின் உள்ளம் அதனால் பூரிப்பாகட்டும் - ஆகையால் - 2



Credits

Produced by Bro.Emil Jebasingh

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

Kiristhuvin Adaikalathil

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம் - (2)

1. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும் - (2) - நாம் கிறிஸ்துவின்

2. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை - (2) - நாம் கிறிஸ்துவின்

3. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரைபடமாயுள்ள
யாரையும் அணுகாது - (2) - நாம் கிறிஸ்துவின்



Credits

Produced by Bro.Emil Jebasingh

காலம் கடந்திடும் முன்னர்

Kalam Kadanthidum

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1. காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச்செல்லச் சேருமே
சுத்தக் கரத்தை உயர்த்தி
பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை
தடுத்து நிறுத்தக் கூடுமே - இன்றே

காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச்செல்லச் சேருமே

2. தன் கடன் செய்யா மனிதர்
கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர்
துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் சொய்யார்
சிரசினில் அடித்துக்கொள்வார்
மாயமாலம் புரிந்தோர்க்கு
செம்மையாயப் பதில் கொடுப்பார் - இன்றே

3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய்
ஜோதியாய் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம்
வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர்
ஆனந்த பாடல் செய்குவார்
இராஜாதி இராஜன் இயேசுவே
நீதியாய் அரசாளுவார் - இன்றே

4. நீ வாழும் இப்பூமி நாசம்
ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி
நீயாக இருக்கலாமே
எழும்பு, எழும்பு தெபொராள்
பாராக்கே, விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை
இன்றைக்கேப் பெற்றெழும்பு - இன்றே



Credits

Produced by Bro.Emil Jebasingh

காலத்தின் பலனை

Kalathin Baelanai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1.காலத்தின் பலனை
உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே..
ஞாலத்தில் எனது
வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக - (2)

இயேசுவே நீரே நித்தியர்
தேவனே நீரே நித்தியர்
காலத்தில் அடங்கா
கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்

2.புல்லைப்போல் ஒழியும்
தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே..
குமிழிபோல் தோன்றி
மறைந்திடும் மாயை
உணர்ந்திட உதவிசெய்யும் - (2) - இயேசுவே நீரே

3.உலகத்து ஆசை
மாமிசப் பற்று
சிற்றின்ப சோதனைகள்..
இயேசுவே எங்களை
விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும் - (2) - இயேசுவே நீரே



Credits

Produced by Bro.Emil Jebasingh

தேவை அழைக்கின்றது

Theavi Azhaikindrathu

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

தேவை அழைக்கின்றது
உன்னைத் தேவை அழைக்கின்றது
தேவை அழைக்கின்றது
என்னைத் தேவை அழைக்கின்றது

செல்லவோ செலுத்தவோ
தேவை அழைக்கின்றது (2)
தேவை அழைக்கின்றது நம்மை
தேவை அழைக்கின்றது (2)

சிறுவர் நடுவில் தேவை
இளைஞர் நடுவில் தேவை
குடும்பம் நடுவில் தேவை
முதியோர் நடுவில் தேவை
கண்கள் காணும் திசை அனைத்தும் தேவை தேவை தேவை - தேவை அழை

கிராமம் கிராமம் தேவை
நகரம் நகரம் தேவை
சிகரங்களி்லும் தேவை
பாலைவனமும் தேவை
கால்கள் நடக்கும் இடங்கள் எல்லாம் தேவை தேவை தேவை - தேவை அழை

பாவ மன்னிப்பு தேவை
நித்திய ஜீவன் தேவை
மறுபிறப்பு தேவை
மன அமைதி தேவை
அனைத்தும் அருள இயேசு கிறிஸ்து தேவை தேவை தேவை - தேவை அழை



Credits

Produced by Bro.Emil Jebasingh

தேவனே உம்மை நான்

Devanae Ummai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் - (2)

1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)
இரத்தமான தண்ணீர் இரசமானதுவே - (2)
அச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர் - தேவனே

2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் - (2)
ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர் - தேவனே

3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே - (2)
உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம் - தேவனே



Credits

Produced by Bro.Emil Jebasingh

தேவசேனை வானமீது

Deva Seanai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடிக் குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)

2. ஐந்துகண்டம் தனில்ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்
தூயர்கூட்டம் சுத்தஉள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானும் ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே

3. கடல்குமுறும் கரைஉடையும் கப்பல்கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம்கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே



Credits

Produced by Bro.Emil Jebasingh

தேவ உலகின் வேந்தரே

Deva Ulahin Vendare

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

தேவ உலகின் வேந்தரே
தேவையுள்ள இடம் வந்தீரோ
ஏழையைப் பார்த்திட வேளையும் வந்ததோ
பாலைவனம் இனி சோலையோ - தேவ

1. கண்ணாடி மாளிகை விட்டோடிப் பீடிகை
மட்டாக வந்தவா எங்கள் பாலா
கண்ணீர் சொரியும் மண்ணின் மடியில்
குடிகொள்ள எண்ணமோ, இயேசுபாலா - (2) - தேவ

2. பெத்லேகேம் ஊரினில், சத்திரம் ஒன்றினில்
நட்சத்திரம் வந்து நிற்பதேன்?
ராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன்
மானிட வடிவாய்ப் பிறந்ததால் - (2) - தேவ



Credits

Produced by Bro.Emil Jebasingh

தூய ஆவியானவர் இறங்கும்

Thooya Aaviyanavar

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

1.தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்தப்பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

2.பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும் - பரிசுத்த

3.ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் - பரிசுத்த

4.ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும் - பரிசுத்த



Credits

Produced by Bro.Emil Jebasingh